பெங்களூரு

ர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்பமொய்லி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் போட்டியிடக் காங்கிரசில் டிக்கெட் கேட்டார். அவருக்குக் காங்கிரஸ் மேலிடம் டிக்கெட் தரவில்லை. காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகி ரக்ஷா ராமையாவுக்கு அவருக்கு பதிலாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிருப்தியில் இருந்து வந்த அவர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வீரப்ப மொய்லி இது குறித்து இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிந்தார்.

அப்போது வீரப்பமொய்லி,

“சிக்பள்ளாப்பூர் தொகுதியில் போட்டியிட நான் டிக்கெட் கேட்டேன். ஆனால் கட்சி மேலிடம் இந்த போட்டியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு என்னிடம் கூறியது. கட்சி மேலிடத்தின் முடிவை ஏற்று நான் போட்டியில் இருந்து விலகிக் கொண்டேன்.  நான் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எங்கள் கட்சி வேட்பாளர் ரக்ஷா ராமையாவை ஆதரிக்கிறேன். அவரை ஆதரிக்குமாறு எனது ஆதரவாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளேன்”

என்று தெரிவித்துள்ளார்.