பெங்களுரூ:
ர்நாடக மாநிலபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எஸ். சுரேஷ்குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பின்பு தன்னைத்தானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

இதைப்பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் சுரேஷ் குமார் பதிவிட்டிருப்பதாவது: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பின்பு மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில், என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். அறிகுறிகள் எதுவும் இல்லாததால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்ட அமைச்சர்களில் இவரும் ஒருவராக இருந்துள்ளார்.

இந்த அமர்வில் கலந்து கொண்ட முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் பல அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.