பெங்களூரு:
மிழகத்திற்கு உரிய காவிரி நீர் பங்கினை அளிக்கச் சொன்னால், “இங்கேயே வறட்சி.. தண்ணீர் இல்லை… மக்கள் தவிக்கிறார்கள்” என்றெல்லாம் பேசுவது கர்நாடக அரசியல்வாதிகளின், அரசுகளின் வாடிக்கை.
ஆனால் பெங்களூருக்கு வழங்கப்படும் காவிரி குடிநீரில் பாதி அளவு நீரை அவர்கள் வீணாக்குகிறார்கள் என்பதே அதிர்ச்சி அளிக்கும் உண்மை.
k-5
கர்நாடகத்தில் காவிரி நீரைப் பயன்படுத்துவதில் பெங்களூரின் பங்கு 50 சதவீதமாகும். பெங்களூர் மக்கள் காவிரி நீரைத்தான் குடிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். அந்த நீரில் 49 சதவீத அளவை வீணடிக்கிறது கர்நாடக அரசு.
இந்தத் தகவலை, “ இந்தியாஸ்பெண்ட்” ஆய்வுச் செய்தி அம்பலப்படுத்தி  இருக்கிறது.
இந்தியாவில் மிகப் பெரிய அளவில் இப்படி குடிநீரை வீணடிக்கும் நகரம் கொல்கத்தாதான். அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் பெங்களூருவும் காவிரி நீரை வீணாக்கி வருகிறது.
kaveri-2
பெங்களூருவில் மக்கள் தொகை  அடர்த்தி அதிகம். அதாவது, கர்நாடகத்தின் மக்கள் தொகை அடர்த்தி சராசரியை விட 13 மடங்கு இங்கு அதிகம்.  பெங்களூருவுக்கு தினசரி மொத்தம் 42,223 மில்லியன் லிட்டர் தண்ணீர் காவிரியிலிருந்து அளிக்கப்படுகிறது.  இதில் 49 சதவீத தண்ணீர் எதற்குமே பயன்படுத்ப்படாமல் வீணடிக்கப்படுகிறது.
மீதமுள்ள தண்ணீரில் 40 சதவீத அளவுக்கு வீடுகளுக்கு குடிநீராக பயன்படுகிறது. 4 சதவீதம் குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்குப் போகிறது. மீதமுள்ள தண்ணீர் துப்புறவு மற்றும் தொழிற்சாலைகளுக்கான உபயோகத்திற்கு அளிக்கப்படுகிறது.
k4
இந்திய அளவில் தண்ணீரை வீணடிக்கும் நகரங்கள் வரிசையில் பெங்களூரு 2வது இடத்தைப் பிடிக்கிறது. முதலிடம் கொல்கத்தாவுக்கு அது. 50 சதவீத தண்ணீரை வீணடிக்கிறது. டெல்லி 26, சென்னை 20, மும்பை 18 சதவீதம்.
உலக அளவில் சர்வதேச நகரங்களில் இந்த வீணடிப்பானது 15 முதல் 20 சதவீதம் வரைதான் உள்ளது. ஆனால் கொல்கத்தாவும், பெங்களூரும் மிக அதிக அளவில் தண்ணீரை வீணடிக்கின்றன. கணக்காக சொல்லப்போனால்,  தினமும்  600 மில்லியன் லிட்டர் வீணாகிறது.
kaveri-3
இது உண்மைதான் என்று பெங்களூர் குடிநீர் வடிகால் வாரிய முன்னாள் தலைவர் டிஎம் விஜயபாஸ்கர் தெரிவிக்கிறார்.  அவர், “கடந்த காலங்களை விட இப்போது தண்ணீர் அதிக அளவில் வீணாகிறது. தினமும் 1400 மில்லியன் லிட்டர் நீர் பெங்களூருக்கு விநியோகிக்கப்படுகிறது என்றால் அதில் 600 மில்லியன் லிட்டர் வீணாகிறது “ என்கிறார்.
இப்படி வீணாவதற்கு முக்கியக் காரணம் ஆங்காங்கே தண்ணீரை பம்ப் போட்டுத் திருட்டுத்தனமாக எடுக்கப்படுவதும்  குடிநீர் வரும் குழாய்களில் ஏற்படும் கசிவுகளை அடைக்காததும்தான். சட்டத்துக்கு புறம்பாக  பலர் பம்ப் போட்டு தண்ணீரை திருடி வருகின்றனர். இதை அரசு கண்டுகொள்வதே இல்லை. அதேபோல லீக்கேஜ் பிரச்சினை குறித்தும் அரசு துரிதமாக நடவடிக்கை எடுப்பதில்லை.k-6
மெயின் விநியோக பைப்புகளில் பெருமளவில் லீக்கேஜ் ஆகிறது. . கிட்டத்தட்ட இதன் மூலம்தான் 88.5 சதவீத தண்ணீர் வீணாகிறது. .
கர்நாடகம் காவிரி நீரில் 270 ஆயிரம் மில்லியன் கன அடி நீரை பயன்படுத்திக்கொள்ள காவிரி நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் அனுமதி அளித்துள்ளது. அதில், 80 சதவீதத்தை விவசாயத்திற்கும், மற்ற 20 சதவீதத்தை கிராமம் மற்றும் நகர்ப்புற வீடுகளுக்கும் பயன்படுத்த  அனுமதித்துள்ளது.  இதில் பெங்களூருவே அதிக அளவிலான தண்ணீரை பயன்படுத்தி வருகிறது.
பெங்களூருக்கு மட்டும் 19 டிஎம்சி நீர் குடிநீருக்காக அளிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் இதை மேலும் 10 டிஎம்சி உயர்த்தி 29 டிஎம்சியாக்கி விட்டது  கர்நாடக அரசு. இதற்குக் காரணம் கடந்த 2007ம் ஆண்டு பல கிராமப்புறப் பகுதிகள் பெங்களூர் நகரத்துடன் இணைக்கப்பட்டதுதான். ஆக மொத்தமாக 30 டிஎம்சி!
kaveri
பெங்களூரு உயரமான இடத்தில் உள்ளது. இதனால் காவிரியிலிருந்து பம்ப் செய்துதான் தண்ணீரைக் கொண்டு வருகிறார்கள்.  இதற்கு அதிக அளவில் செலவு பிடிக்கும். பெங்களூர் நகரில் நிலத்தடி நீரை ஏற்கெனவே மக்கள் சுத்தமாக வழித்தெடுத்து விட்டனர். மாசும் அதிகரித்து விட்டது. ஏரிகளையும் அழித்துவிட்டனர்.
மேலும் பெங்களூருக்கு அருகில் உள்ள 120 ஆண்டு பழமையான ஹெசரகட்டா மற்றும் 83 வருட பழமையான திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கங்களும் பயனற்று போய்விட்டன.  ஆகவே காவிரியை மட்டுமே பெங்களூரு நம்பியுள்ளது.
வீணாகும் காவிரி நீரை சரி செய்யும் பணிகளை செய்ய  மாநில அரசு துரித கதியில் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தண்ணீர்  தேவை மிக மிக அதிகரிக்கும். நிலைமை மிக மிக மிக மோசமாகும் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.
கர்நாடக அரசு விழிக்குமா?