பெங்களூரு,

டிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் காரணமாக விஜய்ரசிகர்களுக்கும், கன்னட அடைப்புகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து  மைசூரு பகுதியில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தியது.

மேலும், பெங்களூரு அருகே உள்ள  மல்லேஸ்வரம் ராதாகிருஷ்ணா தியேட்டரில் நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது.  இதையொட்டி விஜய் ரசிகர்கள் அந்த  திரையரங்கில் கட் அவுட்டுகளை வைத்திருந்தனர்.

இந்நிலையில்,  கர்நாடகாவில் தமிழ் திரைப்படம் வெளியிடக் கூடாது என முழக்கமிட்டபடி வந்த கன்னட அமைப்பினர் விஜய் ரசிகர்கள் வைத்திருந்த கட் அவுட்டுகளை அகற்றினர்.

இதன்வி காரணமாக விஜய் ரசிகர்களுக்கும் கன்னட அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக  அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

கன்னட அமைப்புகளின் எதிர்ப்புகாரணமாக அந்த தியேட்டரில் மெர்சல் படம் திரையிடப்படவில்லை. அதேபோல மைசூரிர் உள்ள தியேட்டர்களிலும் மெர்சல் படம் திரையிடாமல் தவிர்க்கப்பட்டது.

இதன் காரணமாக நேற்று படத்தை காண தியேட்டருக்கு வந்த கர்நாடக விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.