சென்னை: சென்னை மயிலாப்பூரில் திமுக எம்.பி. கனிமொழி இன்று தமது வாக்கை செலுத்தினார்.

 

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

சில இடங்களில் வாக்கு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் சற்று நேரமானாலும், வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 6 மணி முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள திமுக எம்பி கனிமொழி மருத்துவமனையிலிருந்து பிபிஇ கவச உடை அணிந்து மயிலாப்பூர் வாக்குச்சாவடிக்கு வந்து தமது வாக்கை பதிவு செய்தார். அப்போலோ மருத்துவமனையிலிருந்து நேரடியாக மயிலாப்பூர் வாக்குச்சாவடிக்கு வந்து அவர் வாக்களித்தார்.