சென்னை

டிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமலஹாசன் மே தினத்தையொட்டி டிவிட்டரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் கமலஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.   சமீபகாலமாக இவர் காங்கிரஸ் கட்சிக்குத் தனது ஆதரவை நேரடியாகவும் மறைமுகமாகவும் தெரிவித்து வருகிறார்.   கடந்த உள்ளாட்சி மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் இவர் கட்சி தனித்துப் போட்டியிட்டது.

இன்று உலகெங்கும் தொழிலாளர் தினமான மே தினம் கொண்டாடப்படுகிறது.  இதற்குப் பல தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.   அவ்வகையில் கமலஹாசன் டிவிட்டரில் தனது மே தின வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

கமலஹாசன் தனது பதிவில்,

“காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்’ என்றார் பாவேந்தர். நமது அன்றாட வாழ்க்கைக்குப் பின்னால் நாமறியாத பல்லாயிரம் பாட்டாளிக் கரங்கள் உள்ளன என்பதை உணர்வதும், அவர்களின் உழைப்பைப் போற்றுவதும், உரிமைகளை உறுதி செய்வதும் நம்முடைய பொறுப்பு. உழைப்பால்தான் இந்த உலகம் உயர்ந்திருக்கிறது.

உழைப்பாளிகளும் உயர்த்தப்பட வேண்டும். தொழிலாளர் சமுதாயத் தோழர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது இதயப்பூர்வமான மே தின வாழ்த்துகள்.”

என்று தெரிவித்துள்ளார்.