சென்னை: பெண்களுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விவகாரத்தில், பயனர்களை தேர்வு செய்யும் வகையில்,  விண்ணப்பத்தை எங்கு, எப்படி கொடுப்பது? என்பது தொடர்பான நெறிமுறைகளை  தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ என்று பெயர் சூட்டி  இருப்பதாக அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தகுதியான பெண்கள் தேர்வு செய்யப்படுவது தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார். எந்த ஒரு தகுதியான பயனாளியும் விடுபடக் கூடாது என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதுடன்,  மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நடத்த  அறிவுறுத்தினார்.

மேலும், மாவட்ட ஆட்சியர்கள், உரிய பயனாளிகளைக் கண்டறிவதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். விண்ணப்பங்களைப் பெற பொது விநியோகக் கடைகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். சாலையோரங்களில் குடியிருப்போர், பழங்குடியினர், தூய்மைப் பணியாளர்கள், இதர ஆதரவற்றோர் இத்திட்டத்தில் பயனடைவதை உறுதிசெய்ய வேண்டும். அவர்களிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவை இல்லாவிட்டாலும், அவற்றைப் பெற உரிய வழி செய்து, மகளிர் உதவித்தொகை கிடைக்கச் செய்ய வேண்டும். ஒரு கோடி பெண்களின் உயிர்த் தொகை என்பதை மனதில் வைத்து அக்கறை, பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள் என அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி, தமிழக அரசு, மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான நெறிமுறைகளை  வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியும் சிறப்பு முகாம்களை நடத்தப்போவதாக அறிவித்து உள்ளது. இந்த நிலையில்,  மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை கொண்டு உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.  தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலை கடைப்பகுதியில் வசிக்கிறார்கள் என்ற விவரம் விரைவில் வழங்கப்படும்.  தன்னார்வலர்கள் வசிக்கும் பகுதிக்கு 2 கிலோ மீட்டாருக்கு மிகாமல் அவர்களுக்கான பணி ஒதுக்கீடு செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ள நெறிமுறைகளின்படி “கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பப் பதிவு தன்னார்வலர் பணிக்கு இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் விவரங்களைப் பகிர, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. சில மாவட்டங்களில் தன்னார்வலர்களின் விபரங்கள் பகிரப்பட்டுள்ளன.

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலை கடைப் பகுதியில் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் இணைக்கப்பட்ட தொகுப்பு விரைவில் மாநில அலுவலகத்திலிருந்து மாவட்டங்களுக்குப் பகிரப்படும். இப்பொழுது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு எவ்வித பணி ஓதுக்கீடுகளும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாநில அலுவலகத்திலிருந்து தகவல்கள் பகிரப்படும் பொழுது கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1. வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் செய்ய வேண்டிய பணிகள்

மாநில அலுவலகத்திலிருந்து பகிரப்படும் தகவல் தொகுப்பில் ஒவ்வொரு நியாய விலை கடைப்பகுதியில் வசிக்கும் தன்னார்வலர்களின் விவரங்கள் இடம் பெற்று இருக்கும். சில நியாய விலை கடைப்பகுதிகளில் தேவைக்கு அதிகமான தன்னார்வலர்கள் தகவல் தரவு பதிவுப் பணிக்கு விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். சில நியாய விலை கடை பகுதிகளில் போதிய தன்னார்வலர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. இவர்களுக்கான பணி ஒதுக்கீடு வழங்கும் பொழுது இயன்ற வரையில் இரண்டு கிலோ மீட்டருக்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஒருவேளை இரண்டு கிலோமீட்டருக்கும் மேற்பட்ட தொலைவில் பயணிக்க தன்னார்வலர் சம்மதம் தெரிவித்தால் அவர்களுக்கு இரண்டு கிலோமீட்டருக்கு அப்பால் பணி வழங்கலாம்.

தகவல் உள்ளீடு பணிகளுக்கும் கள ஆய்வுப் பணிகளுக்கும் விருப்பம் தெரிவித்த தன்னார்வலர்களைத் தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு அவர்களுக்கு பணியின் முக்கியத்துவத்தை விளக்கி அவர்களது சம்மதத்தைப் பெற்று பணியில் அமர்த்துதல் வேண்டும். சில தன்னார்வலர்கள் தற்பொழுது இந்தப் பணி செய்ய விருப்பம் இல்லை என்று தெரிவித்தால் அவர்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது. இது தொடர்பான தகவல் பதிவை கூகுள் சீட்டில் பதிவு செய்ய வேண்டும். ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் உள்ள வட்டாட்சியருடன் இணைந்து தன்னார்வலர்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

2. வருவாய் கோட்டாட்சியர் செய்ய வேண்டிய பணிகள்:

தன்னார்வலர்களின் தகவல் விவரம் கிடைக்கப்பெற்றவுடன் புதிய தன்னார்வலர்கள் இல்லாத நியாய விலை கடைப் பகுதிகளுக்கு,புதிய தன்னார்வலர்களைக் கண்டறிய வேண்டும். குறிப்பாக நகரப் பகுதிகளில் போதிய இல்லம் தேடி சுல்வித் தன்னார்வலர்கள் இல்லை. இப்பகுதிகளில் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், வேறு பகுதியில் உள்ள இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் மூலமாக அடையாளம் கண்டு நியமிக்கலாம். வட்டார ஆலோசிக்காமல் பணி ஒதுக்கீடுகள் அறிவுறுத்தப்படுகிறது. 20% ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களைக் கலந்து எதுவும் செய்ய வேண்டாம் என்று கூடுதல் தன்னார்வலர்களைப் பதிலி (Reserve) தன்னார்வலர்களாகப் பயன்படுத்துவதற்காக அடையாளம் கண்டு வைத்திருக்க வேண்டும். இவர்களுக்கு உதவி மையத் தன்னார்வலர்கள் (Help Desk Volunteer) பொறுப்பு வழங்கலாம். விண்ணப்பப் பதிவு பணிக்குத் தேவைப்படும் பொழுது இவர்களை விண்ணப்பதிவு தன்னார்வலர்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நியாயவிலைக் கடை அளவிலான பணி ஒதுக்கீடுகளை வருவாய் வட்ட அளவில் செய்ய வேண்டும். மேற்கண்ட தகவல்களை அனைத்து அலுவலர்களுக்கும் கள் மாவட்ட தெரியப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களையும், அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.