Skip to content
  • Sun. Feb 8th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
உலகம் தமிழ் நாடு

கைலாசா நாடு ரெடி: ஆகஸ்டு 22ந்தேதி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடும் நித்யானந்தா!

Aug 13, 2020
கைலாசா: ஆகஸ்டு 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்போவதாக  தலைமறைவாக உள்ள  நித்யானந்தா சுவாமிகள் அறிவித்து உள்ளார்.
மதுரை ஆதீனம்,  நடிகை ரஞ்சிதா உடன் வீடியோ, பாலியல் புகார்கள் எனப் பல சர்ச்சை, குஜராத் மாநிலத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் இரு பெண்கள் காணாமல் போனது உள்பட பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள நித்தியானந்தா கடந்த பல மாதங்களாக தலைமறைவாக உள்ளார்.   அவரை காவல்துறையினர் தேடி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அவர் கடந்த  ஆண்டு (2019)  டிசம்பர் மாதத்தில், அவர்  தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவடாரில் ஒரு தனித் தீவு வாங்கி, அதைத் தனது தனி நாடாக அறிவித்து இருப்பதாக வீடியோ வெளியிட்டிருந்தார்.
அப்போது, “கைலாசா என்பது இந்துமதத்தைப் பின்பற்ற முடியாத நாடுகளில் வசிக்கும் அனைத்து இந்துக்களின் எல்லையற்ற நாடாகும்.  இது அமெரிக்காவில் உள்ள இந்து ஆதி சைவ மக்களால் உருவாக்கப்பட்டது என்றாலும் இனம், பாலினம், சாதி,  மதம் என எந்த வேறுபாட்டையும் பார்க்காத இந்துக்களுக்கான நாடாகும்.  இந்நாட்டில் ஆன்மீகம், கலாச்சாரம் அகிம்சை ஆகியவை  பின்பற்றப் படும்” என அறிவிக்கப்பட்டது.
பின்னர், கைலாசா நாட்டின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது, அத்துடன்  கைலாசா நாட்டில் உள்நாட்டுக் காவல், பாதுகாப்பு, நிதி, வர்த்தகம், வீட்டுவசதி, கல்வி, தொழில்நுட்பம், சுகாதாரம், மனித வள மேம்பாடு, மேம்பட்ட நாகரிகம் ஆகிய துறைகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது., விருப்பம் உள்ளவர்கள் அதில் குடிமக்களாகச் சேரலாம் என்றும் சில மாதங்களுக்கு முன்பு அவர் அறிவித்தார்.
இந்நிலையில் கைலாசா நாடு தொடர்பாக தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளி யிட்டுள்ளார்.  அதில்,
கைலாசா நாட்டிற்கு உரிய கரன்சி நோட்டுகளும் தயாராக இருப்பதாகவும், வெளிநாடுகளுக்கு ஒரு கரன்சியும், உள்நாட்டில் ஒரு கரன்சியும் பயன்படுத்தப்பட இருப்பதாகவும் அர் தெரிவித்துள்ளார்.
தனக்கு நிறைய நன்கொடைகள் கிடைத்திருப்பதால், நல்ல  காரியங்களுங்காக செலவிட வங்கி தொடங்கி உள்ளேன்.
வாடிகன் வங்கியை மாதிரியாக வைத்து, ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா உருவாக்கப்பட்டு உள்ளது.
கைலாசாவின் ரிசர்வ் வங்கி, சட்டத்தின்படியே தொடங்கப்பட்டு உள்ளது. சட்டத்திற்கு புறம்பாக எதுவும் இருக்காது.
300 பக்க பொருளாதார கொள்கை தயாராக உள்ளது.
கைலாசா நாட்டிற்கான பணம் வடிவமைக்கப்பட்டுஉள்ளது. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.
உள்நாட்டிற்கு ஒரு கரன்சியும், வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சியும் அச்சடிக்க தயாராகி விட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]

Post navigation

தமிழக இரு மொழிக் கொள்கை யாரையும் கட்டுப்படுத்தவில்லை : பேராசிரியர் ராமசாமி
மாணவர்கள் இன்றி பள்ளிகளில் சுதந்திர தின நிகழ்ச்சி! தமிழக அரசு

Related Post

தமிழ் நாடு

பிப்ரவரி 17-ல் சட்டபேரவை கூடுகிறது – அன்றே இடைக்கால பட்ஜெட்! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

தமிழ் நாடு

‘மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம்’! பிப்ரவரி 12ந்தேதி திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ் நாடு

காங்​கிரஸ் இருந்​தால்​தான் திமுக கூட்​ட​ணிக்கு மதச்​சார்​பின்மை என்ற அடை​யாளம்! கார்த்தி சிதம்பரம்

உலகம்

இந்தியா உலகம் விளையாட்டு

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது – போட்டி அட்டவணை

February 7, 2026 A.T.S Pandian
இந்தியா உலகம்

எண்ணை இறக்குமதிக்கு இந்தியா மீது விதித்த 25% கூடுதல் வரி ரத்து! ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் டிரம்ப்

February 7, 2026 A.T.S Pandian
உலகம்

‘டிரம்ப்Rx’ : அமெரிக்க அதிபரின் பெயரில் மருந்து மாத்திரைகளை அதிரடி தள்ளுபடி விற்பனை செய்யும் புதிய இணையதளம்

February 6, 2026 Sundar
உலகம்

பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் – பில் கேட்ஸ் கூட்டணி… எதற்காக ஏற்பட்டது ?

February 4, 2026 Sundar
இந்தியா உலகம்

எப்ஸ்டீன் கோப்புகள்: கொரோனா பெருந்தொற்று மனிதாபிமான பிரச்சனையா அல்லது திட்டமிட்ட வியாபாரமா? – அதிர்ச்சி தகவல்கள்

February 4, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer