ண்டிகுவா

லகக் கோப்பை கிரிக்கெட்டில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இந்தியா இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.

மேற்கு இந்தியாவில் ஜூனியர் உலகக்கோப்பை என்னும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகள் மேற்கு இந்தியாவில் நடைபெறுகிறது.  இது 14 ஆம் சீசன் ஆகும்.  நேற்று இந்த போட்டியின் இரு அரை இறுதிப் போட்டிகள் நடந்தன.  இவற்றில் ஒரு போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளும் மற்றொன்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவும் மோதின.

இதில் முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து அணி பைனலுக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் இந்தியா  ‘டாஸ்’ வென்று பேட்டிங் தேர்வு செய்தது.  ஆஸ்திரேலியா அணி பவுலிங் செய்தது/

 இந்திய அணித் தலைவர் யாஷ் தல் 110 ரன் அடித்தார்.  மற்றொரு ஆட்டக்காரரான  ஷேக் ரஷீத் அடித்த 94 ரன்கள் அடித்தார்  இந்த போட்டியின் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் பெற்றிருந்தது.

அதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 41.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்கள் மட்டுமே எடுத்தது  எனவே 96 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வியைத் தழுவியதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது