ஜோத்பூர்:

சாமியார் ஆசாராமுக்கு பலாத்கார வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

ராஜஸ்தான் ஜோத்பூரை சேர்ந்த சாமியார் ஆசாராம் பாபு, ஆசிரமத்தில் தங்கியிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

2013ம் ஆண்டில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் ஜோத்பூர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.