போபால்: மத்திய பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடெங்கிலும் கொரோவை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஆனாலும் பல பகுதிகளில் இந்த ஊரடங்கின் அவசியத்தை புரிந்து கொள்ளாமல் மக்கள் வெளியில் நடமாடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந் நிலையில், மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிய வந்திருக்கிறது. அம்மாநிலத்தில் உள்ள பத்திரிகையாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

அவர் யார் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. அவர் அண்மையில் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கெடுத்து கொண்டவர் என்ற விவரம் தெரிய வந்திருக்கிறது. இந்த சந்திப்பில் தான் கமல்நாத் தமது ராஜினாமா முடிவை அறிவித்தார்.

இதே போன்று, மார்ச் 17ம் தேதி லண்டனில் இருந்து திரும்பிய பத்திரிகையாளரின் மகளுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவரின் மனைவி, மகன் உள்ளிட்டோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இல்லை.