வாஷிங்டன்

ஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்குத் தொடர்ந்து அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

கடந்த 16 மாதங்களாக ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 16 மாதங்களாகப் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் விநியோகம், பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன.

சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

இருவரும் அப்போது போரின் தற்போதைய நிலவரம், உக்ரைனின் எதிர்த் தாக்குதல் போன்றவை குறித்தும், ரஷ்யாவில் வாக்னர் என்ற தனியார் கூலிப்படையினர் அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்பியது குறித்தும் விவாதித்ததாக வெள்ளை மாளிகை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

அப்போது உக்ரைனுக்கு பொருளாதாரம், மனிதாபிமான உதவிகள் உள்ளிட்ட ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதாக ஜோ பைடன் உறுதி  அளித்துள்ளார்.