ரஜோரி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார்.

எல்லை பகுதியில்  கொரோனா தாக்கத்தை தமக்கு சாதகமாக்கி கொண்டு, பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறிலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் அதற்கு பதிலடி தந்து வருகிறது.

இந் நிலையில், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் கெரி பகுதியில் அத்துமீறி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் நுழைந்து தாக்கியது. அப்போது  இந்திய ராணுவமும் பதிலடி தர, இருதரப்புகம் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

பல மணி நேரம் நீடித்த இந்த தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டியடித்தனர். தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். அவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்த ராஜ்விந்தர் சிங் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் தீவிரவாதிகள் பதுங்கு குழி அமைத்து, ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் நடத்தப்பட்டது. அதன் முடிவில் பயங்கரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.