ண்டன்

ங்கிலாந்து நாட்டின் கவெண்டரி நகர மேயராக டர்பன் அணிந்த சீக்கியரான ஜஸ்வந்த் சிங் பிர்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1960 ஆம் ஆண்டில் பஞ் சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜஸ்வந்த் சிங் பிர்டியின் குடும்பம் இங்கிலாந்தின் கவென்ட்ரி நகரில் குடியேறியது.  இங்கு கடந்த 4-ம் தேதி இங்கு கவுன்சிலர் பதவிகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டுக் கடந்த 18-ம் தேதி மேயர் பதவிக்குத் தேர்தல் நடைபெற்றது.

இந்த கவென்ட்ரி நகர மேயர் பதவிக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடைபெறாது. திறமை, நேர்மையின் அடிப்படையில் மேயரை தேர்வு செய்ய கவுன்சிலர்கள் வாக்களிப்பார்கள். அத்தகைய அடிப்படையில் கவென்ட்ரி மாநகராட்சியில் தொழிலாளர் கட்சிக்குப் பெரும்பான்மை இருந்தபோதிலும் திறமை, நேர்மையின் அடிப்படையில் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த சீக்கியர் ஜஸ்வந்த் சிங் பிர்டி மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

பிர்டி கவெண்டரி நகரில் சுமார் 17 ஆண்டுகள் கவுன்சிலராகவும் ஓராண்டு துணை மேயராகவும் பதவி வகித்துள்ளார். எனவே அந்த அனுபவத்தின் அடிப்படையில் மாநகராட்சியை வழி நடத்துவேன் என பிர்டி தெரிவித்துள்ளார்.  இங்கிலாந்து நாட்டில் டர்பன் அணிந்த முதல் சீக்கிய மேயர் என்ற பெருமையை ஜஸ்வந்த் சிங் பிர்டி பெற்றுள்ளார்.