டோக்கியோ

ஷ்யா மற்றும் இந்தியாவை அடுத்து ஜப்பான் நாடு தனது விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப உள்ளது.

சமீபத்தில் இந்தியா மற்றும் ரஷியா நாடுகள் சமீபத்தில் நிலவுக்கு விண்கலம் அனுப்பியது. இவற்றில் ரஷியாவின் விண்கலம் நிலவில் மோதி தோல்வி அடைந்தது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இன்று மாலை 6.04 மணிக்கு இந்தியாவின் விக்ரம் லேண்டர்  நிலவில் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தற்போது கிடைத்த செய்திகளின்படி நிலவை ஆய்வு செய்ய ஆகஸ்ட் 26-ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு ஜப்பான் எஸ்.எல்.ஐ. எம் விண்கலத்தைச் செலுத்த உள்ளது .

ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு அடுத்து மூன்றாவது நாடாக ஜப்பான் நிலவை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.