சென்னை: வருகிற புதன்கிழமை(ஜன. 18) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  இதன காரணமாக 18ந்தேதி விடுமுறை என வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 14ந்தேதி முதல்  ஜனவரி 17 ஆம் தேதி வரை  பள்ளி கல்லூரிகளுக்கு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த  நிலையில், வெளியூர் சென்றவர்கள், சொந்த இடங்களுக்கு திரும்பும் வகையில், வரும் 18ந்தேதியும், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என தகவல்கள் பரவின. இது தொடர்பாக செய்திகளும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அன்பில் மகேஷ், ‘ஜனவரி 18 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை. வருகிற புதன்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை’ என்று தெரிவித்தார்.

அதுபோல, பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் சென்று திரும்பும் பொதுமக்கள் வசதிக்காக வருகிற 18 ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளதாக வெளியான தகவலை அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.