ரோம்: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு தழுவிய பொதுமுடக்கம் பின்பற்றப்படும் என்று இத்தாலி அறிவித்து உள்ளது.

உலகின் பல நாடுகளில் மீண்டும் கொரோனா வைரசின் பரவல் வெகு வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இத்தாலியில் நாளுக்கு நாள் இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

லோம்பார்டி, லோசியோ உள்ளிட்ட 7 நகரங்களில் பரவல் அதிக பாதிப்புகளை பதிவு செய்துள்ளன. இந் நிலையில் இத்தாலியில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வரும் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இத்தாலியில் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இந்த வாரம் கொரோனா பரவல் 10% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது