சென்னை

மிழக அமைச்சர் எ வ வேலுவின் இல்லம் மற்றும் அவருக்குத் தொடர்பான இடங்களில் 5 ஆம் நாளாக இன்ரும் வருமான வரிச் சோதனை தொடர்கிறது.

கடந்த 5 நாட்களாகத் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும்  அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சி ஆர் பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்பட எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்,

இந்த சோதனையை வருமான வரித்துறை அதிகாரிகள் திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.இன்றும் இந்த சோதனை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 5வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அமைச்சர் எ.வ.வேலுவின் மகனுடைய வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

இந்த சோதனையில்; இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவலை வருமான வரித்துறை தரப்பில் வெளியிடவில்லை.  எனவே சோதனையின் முடிவில் தான் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா போன்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.