ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடக்கும் விஜய் ஹசாரே டிராஃபி ஒருநாள் தொடரில் தமிழக அணி, பெங்கால் அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக நான்காவது வெற்றியைப் பெற்றது.

தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக கொண்ட தமிழக அணி ஏற்கனவே ராஜஸ்தான், சர்வீசஸ் மற்றும் பீகார் அணிகளை வென்றிருந்தது. இந்நிலையில் தனது நான்காவது போட்டியில் பெங்கால் அணியை சந்தித்தது.

முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 286 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் 97 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். ஷாருக்கான் 69 ரன்களும், விஜய் சங்கர் 41 ரன்களும், அபராஜித் 34 ரன்களும் அடித்தனர்.

பின்னர் களமிறங்கிய பெங்கால் அணி, 21 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்துவிட்டது. ஆனாலும், அந்த அணியின் ஷாபாஸ் அகமது 107 ரன்களை அடித்து கெத்து காட்டினார். ஆனால், மற்றவர்களின் ஒத்துழைப்பு இல்லாததால், 45.3 ஓவர்களிலேயே 212 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது அந்த அணி.

இதன்மூலம் 74 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்ற பெங்கால் அணி, இத்தொடரில் தொடர்ச்சியாக தனது 4வது வெற்றியை பதிவுசெய்தது.