பெங்களூரு:

ந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நாளை மறுதினம் (6ந்தேதி) மீண்டும் ஒரு புதிய செயற்கை கோளை விண்ணில் ஏவுகிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி 24ந்தேதி கலாம் சாட் செயற்கை கோளுடன் பிஎஸ்எல்வி சி-44 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட நிலையில், தற்போது ஜிசாட்-31 செயற்கை கோளை ஏவுகிறது.

விண்வெளி தொழில்நுட்பத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இஸ்ரோ, இந்த ஆண்டு சந்திரயான்-2 உள்பட 32 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. மேலும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவும் திட்டமிட்டு உள்ளது.

இந்த நிலையில், 40-வது தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்-31 செயற்கைகோளை அரினா-5 விண்கலம் மூலம், ஃபிரெஞ்ச் கயானாவிலிருந்து வரும் 6ம் தேதி விண்ணில் ஏவ முடிவெடுத்துள்ளது.

தற்போது, அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,விரைவில் கவுன்டவுன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரோ தயாரித்துள்ள ஜிசாட்-31 அதிநவீன செயற்கைகோள்,. 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்ட து.

இந்த செயற்கைகோள்  டிடிஹெச் சேவை, டிவி ஒளிபரப்பு போன்றவற்றிக்கும் பயன்படும் வகையில், செயற்கைகோள் பயன்படும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு விண்ணில் பயணித்து இந்தியாவின் மையப்பகுதியும், தீவுப்பகுதியும் கண்காணிக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.