ஸ்ரீஹரிகோட்டா:
எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை முதல் முறையாக விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

எஸ்எஸ்எல்வி புதிய வகை ராக்கெட், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து, இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது.

தற்போது இஸ்ரோ, ‘மைக்ரோ, நானோ’ என, 500 கிலோ வரை உடைய செயற்கைக்கோளை சுமந்து செல்லும் வகையில், எஸ்.எஸ்.எல்.வி., எனப்படும், ‘ஸ்மால் சேட்டிலைட் லாஞ்ச் வெகிக்கிள்’ ராக்கெட்டை வடிவமைத்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து முதலாவது எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட், ‘இ.ஓ.எஸ்., – 02, ஆசாதிசாட்’ ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை சுமந்தபடி, விண்ணில் பாய்ந்தது.