இஸ்ரேல்:
ஜெருசலேமில் அல்ஜசீரா செய்தி ஊடகத்தின் பெண் நிருபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிழக்கு ஜெருசலேமின் அண்டை நகரமான ஷேயிக் ஜாராவில் கடந்த 1967-ஆம் ஆண்டு நடந்த இஸ்ரேல் அடக்குமுறை எதிர்ப்பு போராட்டத்தின் 54-வது ஆண்டு தினத்தையொட்டி பாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வந்த பெண் நிருபரிடம் போலீசார் அடாவடித்தனத்தில் ஈடுபட்டும், அவரை குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். மேலும் கேமிரா உள்ளிட்ட கருவிகளையும் தூக்கி போட்டு உடைத்ததாக கூறப்படுகிறது.