காபூல்:
காபூல் மசூதி தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இமாம் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலின் வடக்கே ஷகர் தாரா மாவட்டத்தில் ஹாஜி பக்ஷி மசூதியில் கடந்த வெள்ளி கிழமை இறை வணக்கம் நடந்தது. இதில் எண்ணற்றோர் கலந்து கொண்டனர்.  இந்நிலையில்,  மசூதியில் திடீரென குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு காபூல் ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.