ஈரான்:
ரான் புரட்சிகர ராணுவப்படைத் தளபதி காசிம் சுலைமானியை கொன்ற டிரம்பை பழி வாங்குவேன் என்று ஈரான் நாட்டுத் தலைவர் அயோட்டெல்லா அல் கமேனி தெரிவித்துள்ளார்.

டிரம்ப் ஆட்சியின்போது அமெரிக்க ராணுவ ஏவுகணைத் தாக்குதல் மூலமாக ஈரான் புரட்சிகர ராணுவப்படைத் தளபதி காசிம் சுலைமானியை கொலை செய்தது.

இதனால், டிரம்ப் மீது கடும் கோபத்தில் இருந்து வரும் அயோட்டெல்லா அல் கமேனி, தற்போது வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாக்தாத்தில் இருந்த சுலைமானியை தனது உத்தரவின்மூலமாக ஏவுகணை தாக்குதலில் கொலைசெய்த டொனால்ட் டிரம்பை பழிக்குப்பழி வாங்குவேன் என்று குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.