சென்னை: உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் திருவிழா இன்று சென்னையில் தொடங்குகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

கடந்த 2019ம்ஆண்டு இறுதி முதல் நாடுகளை கொரோனா மிரட்டிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு (2020) இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்தால்,  13-வது ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் ரசிகர்கள் இன்றி நடந்தன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5-வது முறையாக வெற்றி பெற்றது.

இந்த நிலையில் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து.  ஆ னால், கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், ரசிகர்கள் இன்றி, கொரோனா கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்தியாவில், 14-வது ஐ.பி.எல். போட்டிகள் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஆமதாபாத் ஆகிய 6 நகரங்களில் மட்டும் நடைபெறுகிறது. மும்பை இந்தியன், சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைஸ் ஐதரபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 8 அணிகள் இதில் பங்கு கொள்கின்றன.

14வது ஐபிஎல் திருவிழாவின் முதல் போட்டி இன்று  சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.

லீக் கட்டத்தில், ஒவ்வொரு அணியும் நான்கு மைதானங்களில் போட்டிகளில் விளையாடும். 56 லீக் போட்டிகளில், தலா 10 போட்டிகள் சென்னை, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரில் நடைபெறும், 8 போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறும்.

இந்த ஐ.பி.எல். போட்டியில்  அனைத்து போட்டிகளும் நடுநிலை இடத்தில் நடைபெறும், எந்த அணியும் தங்கள் சொந்த மைதானத்தில் எந்த போட்டியையும் விளையாடாது.

பிளே-ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மே 30-ந்தேதி நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆட்டமும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். அதுவே ஒரே நாளில் இரண்டு ஆட்டங்கள் இருந்தால், முதலாவது ஆட்டம் மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். மொத்தம் 11 நாட்களில் இரண்டு ஆட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐ.பி.எல். போட்டிகளை நேரில் பார்க்க ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், பூட்டிய மைதானத்தில் போட்டி நடைபெறும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.