வான்கடே:
க்னோ – குஜராத் அணிகள் இடையே இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் தீபக் 55 ரன்களையும், ஆயுஸ் 54 ரன்களையும் அடித்தனர்.

குஜராத் அணி பந்து வீச்சாளர்களில் முஹமத் சமி 3 விக்கெட்டைகளையும், வருண் 2 விக்கெட்டையும், ராஷித் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

159 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
துஷ்மந்த சமீர 2 விக்கெட்டையும், க்ருணால் பாண்டியா மற்றும் தீபக் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஐபிஎல் தொடரில் நாளை மாலை 7.30 மணிக்கு புனேவில் நடக்க உள்ள போட்டியில் ஹைதராபாத் – ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.