மும்பை:
பிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 50 ரன்கள் அடித்தார்.

161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 18.1 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோத உள்ளன.