மும்பை:
பிஎல் 2022 தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

மும்பையில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.

170 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணி 19.1 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு புனேவில் நடக்க போட்டியில் மும்பை – கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.