ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்ன சூப்பர் கிங்ஸ் அணி திரில்  வெற்றி பெற்றது. கடைசி இரண்டு ஓவரில் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில்,கடைசி பந்தில்  சிஎஸ்கே வீரர் சிக்ஸ் அடித்ததால் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்  25-வது லீக் ஆட்டம் ராஜஸ்தானில் உள்ள சுவாமி மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. நேற்று இரவு போட்டி  ராஜஸ்தான் ராயல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது.

நேற்றைய வெற்றி காரணமாக, இதுவரை நடைபெற்று வந்து ஐபிஎல் போட்டிகளில் 100வது வெற்றியை சிஎஸ்கே கேப்டன் தோனி பெற்றுள்ளது குறிப்பிடத்தது.

சிஎஸ்கே அணியில் ஏற்கனவே பிராவோ இல்லாத நிலையில், நேற்யை போட்டியில் ஹர்பஜ%ன் சிங் மற்றும் ஸ்காட் குஜ்ஜெலின் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மிட்செல் சான்ட்னெர், ஷர்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் அணியின் மீது அதிருப்தியிலேயே இருந்து வந்தனர்.

அதுபோல ராஜஸ்தான் அணியில் கடந்த போட்டியின்போது ஆடாத  சஞ்சு சாம்சன், ஜெய்தேவ் உனட்கட்  நேற்றைய ஆட்டத்தில் பங்கேற்றார்கள். அத்துடன்  ரியான் பராக் என்ற 17 வயதான வீரர் ஒருவர் அறிமுக வீரராக இடம் பிடித்தார். கடந்த லீக் ஆட்டத்தில் இடம் பெற்று இருந்த பிரசாந்த் சோப்ரா, கிருஷ்ணப்பா கவுதம், சுதேசன் மிதுன் நேற்றையபோட்டியில் இருந்து நீக்கப்பட்டி ருந்தனர்.

இந்த சூழ்நிலையில், நேற்றைய ஆட்டத்தின்போது  ‘டாஸ்’ வென்ற  சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் ராஜஸ்தான் மட்டையுடன் களமிறங்கியது.  ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரஹானே, ஜோஸ் பட்லர் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

முதல் ஓவரில் ஜோஸ் பட்லர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரும், 2-வது ஓவரில் ரஹானே தொடர்ந்து 2 பவுண்டரியும் விளாசி அமர்க்களமாக ஆட்டத்தை தொடங்கினார்கள். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது.  3-வது ஓவரில் தீபக் சாஹர் பந்து வீச்சில் ரஹானேவுக்கு  எதிராக எல்.பி.டபிள்யூ. கேட்டு அப்பீல் செய்யப்பட்டது. ஆனால் நடுவர் அவுட் கொடுக்க மறுத்ததை தொடர்ந்து சென்னை அணியின் 3வது அம்பயருக்கு முறையீடு செய்தார். இதனை ஆய்வு செய்த 3-வது நடுவர் ரஹானே அவுட் என்று அறிவித்தார். ரஹானே 11 பந்தில் 3 பவுண்டரி அடித்து 14 ரன்கள் குவித்திருந்தார். அடுத்து களம் இறங்கிய சஞ்சு சாம்சன் தான் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார்.

ஜோஸ் பட்லரும் தனது பங்குக்கு சிறிப்பாக ஆடி வந்தனர். அணியின் ஸ்கோர் 15 ஓவர்களில் 103 ரன்னாக இருந்த போது ரியான் பராக் (16 ரன், 14 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய பென் ஸ்டோக்ஸ் (28 ரன், 26 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) தீபக் சாஹர் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. ஜோப்ரா ஆர்ச்சர் 12 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 13 ரன்னும், ஸ்ரேயாஸ் கோபால் 7 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 19 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும், மிட்செல் சான்ட்னெர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது

அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறியது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து , சுரேஷ் ரெய்னாவும் 4 ரன்னில் வெளியேற, தொட்ர்ந்து களமிறங்கிய டுபிளிஸ்சிஸ் 7 ரன்னிலும், கேதர் ஜாதவ் 1 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறியதால் ரசிகர்கள் சோர்வடைந்தனர்.

24 ரன்னில் 4 விக்கெட் வெளியேறி ஆட்டம் தடுமாறியதால், சிஎஸ்கே தோற்றுவிடுமோ  என்ற வொரு சூழ்நிலையை உருவாக்கி வந்தது.  5-வது விக்கெட்டுக்கு கேப்டன் டோனி, அம்பத்தி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தார்.

இந்த  இணை நிதானமாக நின்று ஆடியது. இதன் காரணமாக ஆட்டம் மீண்டும் சூடு பிடித்தது.  17.4 ஓவர்களில் 119 ரன்னாக சிஎஸ்கே ஸ்கோர் உயர்ந்தது. இந்த நிலையில் அம்பதி ராயுடு வெளியேறி னார். அவர் 47 பந்தில் 3சிக்சர், 2 பவுண்டரியுடன் 57 ரன்கள் குவித்திருந்தார்.

தொடர்ந்து  ரவீந்திர ஜடேஜா களம் இறங்கினார். கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றிக்கு 18 ரன்கள் தேவை என்ற பரபரப்பான சூழ்நிலையில்  ஆட்டம் விறுவிறுப்படைந்தது.  அப்போது ராஜஸ்தான் அணி பவுலர் பென்ஸ்டோக்ஸ் வீசிய பந்தை ரவீந்திர ஜடேஜா சிக்சருக்கு தூக்கிய வேகத்தில் அவர் கீழே விழுந்தார்.. அதே நேரத்தில் ராஜஸ்தான் வீரரும் கீழே விழுந்தது  பரபரப்பையும், சிரிப்பையும்  ஏற்படுத்தியது.

தொடர்ந்து 2-வது பந்து நோபாலா வீச,  ரவீந்திர ஜடேஜா ஒரு ரன் ஓடினார். அதற்கு அளிக்கப்பட்ட ‘பிரீ ஹிட்’ வாய்ப்பை எதிர்கொண்ட டோனி 2 ரன்கள் அடித்தார்.

ஆனால் எதிர்பாராத விதமாக அடுத்த பந்தில் டோனி போல்டு ஆகி வெளியேறினார். டோனி, 43 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 58 ரன்கள் குவித்திருந்தார்.

இதையடுத்து மிட்செல் சான்ட்னெர் களமிறங்கினார். அவர் தனது  முதல் பந்தில் 2 ரன் எடுத்தார். ஆனால், அந்த பந்து குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக உயரமாக வீசப்பட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு அம்பயர் அது நோபாலாக கூற, 2வது அம்பையர் அது நோபால் இல்லை என்று மறுப்பு தெரிவிக்க இதை கண்ட தோனி  ஆடுகளத்துக்கு வெளியில் இருந்து மைதானத்துக்குள் புகுந்து வாக்குவாதம் செய்தார்.

ஆனால் டோனியின்  கோரிக்கையை நடுவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். இந்த நிலையில் 5-வது பந்தில் சான்ட்னெர் மேலும்  2 ரன் அடித்தார். கடைசி பந்தில் 4 ரன் தேவை என்ற இக்கட்டான சூழ்நிலையில் அந்த பந்து வைடாக வீசப்பட்டது. இதனால் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்து.

இந்த பந்தை சரியாக பயன்படுத்திய சான்ட்னெர் சிக்சருக்கு தூக்கிசிஎஸ்கே அணியின் வெற்றியை உறுதி செய்தார். சிஎஸ்கே அணி  20 ஓவர்களில்6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது.

ரவீந்திர ஜடேஜா 4 பந்துகளில் ஒரு சிக்சருடன் 9 ரன்னும், சான்ட்னெர் 3 பந்துகளில் ஒரு சிக்சருடன் 10 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இதுவரை 7ஆட்டத்தில் ஆடிய சிஎஸ்கே ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்துள்ள நிலையில், இது 6வது வெற்றியை பெற்றுள்ளது.  சென்னை அணியின் கேப்டன் டோனி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதுவரை நடைபெற்று வந்துள்ள ஐபிஎல் போட்டிகளில், சிஎஸ்கே அணி கேப்டன் தோனி, நேற்றைய வெற்றியை தொடர்ந்து 100 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.