மும்பை

பிஎல் 2018 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வெற்றி கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு நுழந்துள்ளது.

ஐபிஎல் 2018 போட்டிகளின் குவாலிபையர் 1 போட்டியில் நேற்று மும்பையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது.   டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால் ஐதராபாத் அணி பேட்டிங்கில் களம் இறங்கியது.    20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து சென்னை அணி 140 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கியது.   துவக்கத்தில் லேசாக தடுமாறிய சென்னை அணி பிறகு சமாளித்துக் கொண்டு 19.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கான 140 ரன்களை எடுத்து ஐதராபாத் அணியை தோற்கடித்தது.   சென்னை அணியை சேர்ந்த பிளெஸிஸ் 67 ரன்கள் எடுத்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வெற்றியினால் இறுதிப் போட்டிக்கு நேரடி தகுதி பிடித்து விட்டது.    தர வரிசைப் பட்டியலில் 3 மற்றும் 4 ஆம் இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும் ராஜஸ்தான் அணியும் நாளை விளையாட உள்ளன.