பாட்னா: மோடி அரசுக்கு ஆதரவாக அவ்வப்போது கருத்துக்களை தெரிவிக்கும் திரையுலகம் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த  பிரபலங்கள், தற்போது முதுகெலும்பில்லாத கோழைகளாக உள்ளனர் என பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் காட்டமாக கூறியுள்ளார்.

நாடு முழுவதும் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கொரோனா 2வது அலையின் தாக்கம் காரணமாக, தினசரி பாதிப்பு 3லட்சத்தை கடந்துள்ளது. இதற்கிடையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து ராஷ்டிரியா ஜனதாதளம் கட்சித் தலைவரும்,  பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவருமான தேவஸ்வியாதவ் பிரபலங்களை கடுமையாக சாடியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், கோழைகளான இந்திய பிரபலங்களே, முதுகெலும்பு இருக்கிறது என்பதை கொஞ்சம் காட்டுங்கள். உங்கள் தேவதூதர்களின் தவறான நடவடிக்கைகள்  காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை போன்றவற்றால், ஒவ்வொரு நொடியும் மக்கள்  இறந்து  கொண்டிருக்கிறார்கள். உங்கள் மனசாட்சி எங்கே போனது, நீங்கள் மக்களுக்கு விசுவாசமாக இருங்கள்,  அரசுக்கு ஆதரவாக இல்லை… என கூறியுள்ளார்.