அயோத்தி

அயோத்தியில் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி சர்வதேச பட்டம் விடும் திருவிழாவுக்கு எற்பாடுகள் செய்யப்படுகின்றன. 

வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராமர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, அயோத்தி நகரில் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை நடத்த உத்தர பிரதேச மாநில அரசு திட்டமிட்டுள்ளது.  அயோத்தி மேம்பாட்டு ஆணையம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

வரும் 19 முதல் 21-ந் தேதிக்கு இடையில் இந்த பட்டம் விடும் திருவிழா நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துவதற்காக ஒரு தனியார் நிறுவனத்தை நியமிக்க முடிவு செய்யப்பட்டு இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அயோத்தி மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.