காவல் நிலையத்தில் ஆபாச சேட்டை.. தலைமறைவான இன்ஸ்பெக்டர்..

தப்பி ஓடிய கைதிகள் குறித்துத் துப்பு கொடுத்தால் வெகுமதி கொடுப்பது , போலீசார் வழக்கம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தப்பி ஓடிய இன்ஸ்பெக்டர் பற்றி தகவல் தெரிவித்தால் வெகுமதி வழங்கப்படும் என காவல்துறை அறிவித்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் தப்பி ஓடிய அந்த அதிகாரி,‘செக்ஸ்’ இன்ஸ்பெக்டர் ஆவார்.

என்ன நடந்தது?

தியோரியா மாவட்டத்தில் உள்ள பட்னி காவல்நிலையத்துக்கு ஒரு இளம்பெண், தனது தாயாருடன். நில விவகாரம் தொடர்பாகப் புகார் அளிக்க வந்துள்ளார்.

அங்கிருந்த இன்ஸ்பெக்டர் பீஷ்ம பால் சிங், அந்த பெண்கள் முன்னால், கேவலமான ஆபாச நடத்தையில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் தாயும், மகளும் அதிர்ந்து போனார்கள்.

அவருக்குத் தெரியாமல் இதனை வீடியோ எடுத்த இளம்பெண், அந்த காட்சியை உயர் அதிகாரிகள், மற்றும் ஊடகங்களுக்கு ’’வாட்ஸ் அப்’ மூலம் அனுப்பி வைக்க, அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

சேதி அறிந்த அந்த இன்ஸ்பெக்டர் தப்பி ஓடி விட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சரண் அடையுமாறு ஆணையிட்டும் , இன்ஸ்பெக்டர் பீஷ்ம பால் சிங். போலீசில் ஆஜராகாததால்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ பதி மிஸ்ராவுக்கு கடும் ஆத்திரம்.

‘’காணாமல் போன இன்ஸ்பெக்டர் குறித்துத் துப்பு கொடுத்தால் 25 ஆயிரம் ரூபாய் வெகுமதி தரப்படும்’’ என்று அறிவித்துள்ளார், மிஸ்ரா.

-பா.பாரதி