அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது ஆஸ்திரேலியா.

மொத்தம் 84 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது அந்த அணி. அந்த அணியின் மார்னஸ் லபுஷேன் 45 ரன்களை அடித்து களத்தில் நிற்கிறார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், பிரமாதமாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் மற்றும் கேமரான் கிரீன் ஆகியோர் அஸ்வினிடம் பலியானவர்கள்.

அதேசமயம், துவக்க வீரர்களான மேத்யூ வேட் மற்றும் ஜோ பர்ன்ஸ் ஆகியோரை காலி செய்தவர் பும்ரா. இன்றைய நிலையில், மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு பெரியளவில் ஒத்துழைக்கிறது.

நிலைமை இப்படியே போனால், ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்ஸில் இந்திய அணியைவிட பெரியளவில் பின்தங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.