ஜகார்த்தா:
மையலுக்கான பாமாயில் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்படுவதாக இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் ஜோகோ விடிடோ தெரிவிக்கையில், ஏப்ரல் 28ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக, உள்நாட்டில் விலை உயர்வை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த தடையை அடுத்து சமையல் எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களில் ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.