டில்லி:

ந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஜூன் மாதம் மட்டும் 9.71 சதவீதம் சரிவடைந்து உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்க  இறக்குமதி செய்யப்பட்ட விவரங்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது.

பொதுவாக  இந்தியாவிலிருந்து நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள், பொறியியல் சாதனங்கள், பெட்ரோலிய பொருட்கள், தோல் பொருட்கள், ஆயுத்த ஆடைகள், ரசாயனங்கள், கடல் உணவு பொருட்கள் என பல்வேறு வகையான பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட் வருகிறது.

அதேவேளையில், பெட்ரோலிய கச்சா எண்ணெய், பாமாயில் உள்பட ஆபரப்பொருளான தங்கம் போனற் பல பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புள்ளி விவரங்களை  இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி,

கடந்த ஜூன் மாதத்தின் ஏற்றுமதி, இறக்குமதி, வர்த்தக பற்றாக்குறை குறித்த புள்ளிவிவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதில்,

8 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக கடந்த ஜூன் மாதத்தில் ஏற்றுமதி 9.71 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்து உள்ளது.

இதற்கு முன் கடந்த செப்டம்பரில் ஏற்றுமதி 2.15 சதவீதம் குறைந்து இருந்தது, அதன்பிறகு கடந்த ஜூன் மாதம் அதிக அளவிலான சரிவை எதிர்கொண்டுள்ளது.

மேலும், கடந்த ஜுன் மாதத்தில் இந்தியாவில் இருந்து   2,501 கோடி டாலருக்கு மட்டுமே (ரூ.1.72 லட்சம் கோடி) பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.

அதேசமயம் வெளிநாடுகளிலிருந்து 4,029 கோடி டாலருக்கு (ரூ.2.78 லட்சம் கோடி) பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது.

இதில் தங்கம் மட்டும் 270 கோடி டாலருக்கு (ரூ.19 ஆயிரம் கோடி) இறக்குமதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கடந்த ஜூன் மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 1,528 கோடி டாலராக (ரூ.1.05 லட்சம் கோடி) உள்ளது.

இவ்வாறு ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.