டெல்லி: எதிரி நாடுகளின் எவுகணைகளை வானிலேயே சுட்டு வீழ்த்தும் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை ரஷியா  இந்தியாவிற்கு டெலிவரி செய்ய தொடங்கி உள்ளது. இது இந்திய ராணுவத்துக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது.

எதிரி நாடுகளின் வான்பரப்பு தாக்குதலை முறியடிக்கும் வகையில், இந்தியா பல்வேறு ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.  அக்னி வகை ஏவுகணைகள்  12,000 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய திறன் படைத்தது.  அடுத்ததாக 16,000 கிலோ மீட்டர் செல்லும் திறன் படைத்த சூர்யா என்ற ஏவுகணை மற்றும் பிரித்வி, பிரம்மோஸ் என ஏராளான ஏவுகணைகள் நம்மிடம் உள்ளன. மேலும்,  அதிநவீன ரஃபேல் போர் விமானங்களும் விமானப்படையில் இணைந்து பணியாற்றி வருகிறது.  தொடர்ந்து மேலும் கவனம் செலுத்தும் வகையில், வெளிநாடுகளிலும் இருந்து தளவாடங்கள் இறக்குமதி செய்து வருகின்றன.

அதுபோல, வான்பாதுகாப்பு கவசமாக, ரஷ்யாவிடம் இருந்து S-400 டிரையம்ப் ( S-400 Triumf) என்ற வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா வாங்கியுள்ளது.    எஸ்-400 அமைப்பு 400கிமீ தூரம் வரும் எதிரியின் இலக்குகளை வானிலேயே சுட்டு வீழ்த்தும் திறன் பெற்றது.

S-400 ஆனது உலகின் மிகவும் மேம்பட்ட வான்-பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும், இது சுமார் 400 கி.மீ. இது ராக்கெட்டுகள், ஏவுகணைகள், கப்பல் ஏவுகணைகள் மற்றும் விமானங்களுக்கு எதிராக அதன் வான் பாதுகாப்பு குமிழியைப் பாதுகாக்கும் திறன் கொண்டது.

இதுதொடர்பாக இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 2018ம் ஆண்டு,  இந்தியாவுக்கு ரஷிய அதிபர் புதின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்காக இந்தியா 2018 ஆம் ஆண்டில் அமைப்பின் ஐந்து யூனிட்களை வாங்கியது, மேலும் ஒரு வருடத்திற்குப் பிறகு முதல் தவணையாக $800 மில்லியன் செலுத்தியது. S-400 Triumf வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு, எதிரி போர் விமானங்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகளை நீண்ட தூரத்தில் எடுத்துச் செல்லும் இந்தியாவின் திறன்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று கூறப்பட்டது.

இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ரஷ்யாவிடம் வர்த்தக ரீதியிலான தொடர்பு வைத்துக்கொள்ளும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. ஆனால், அந்த எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடமிருந்து 40,000 கோடி ரூபாய் (5.43 பில்லியன் டாலர்) செலவில் S-400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதற்கு முடிவு செய்து ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்தியா மறுத்துவிட்டது.

இதுகுறித்து கூறிய இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம், “இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையைக் கொண்டுள்ளன” என்றும் “இந்தியா ரஷ்யாவுடன் ஒரு சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையைக் கொண்டுள்ளது” என்றும் கூறியது. மேலும்,  “இந்தியா எப்போதும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுகிறது. இது நமது தேசிய பாதுகாப்பு நலன்களால் வழிநடத்தப்படும் நமது பாதுகாப்பு கையகப்படுத்துதல் மற்றும் விநியோகங்களுக்கும் பொருந்தும்.” என்றும் தெளிவு படுத்தியது.

இந்த ஒப்பந்தப்படி அடுத்த 24 மாதங்களில் S-400 அமைப்பை ரஷ்யா இந்தியாவுக்கு அளிக்கும் என கூறப்பட்டது. அதன்தொடர்ச்சியாக தற்போது S-400 Triumf ஏவுகணை அமைப்பை ரஷ்யா இந்தியாவிற்கு வழங்கத் தொடங்கியுள்ளது.  இதை  இராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான மத்திய சேவையின் (FSMTC) இயக்குனர் டிமிட்ரி ஷுகேவ் உறுதி செய்துள்ளார்.

இந்தியத் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை இருந்தாலும் கடல் மற்றும் வான் வழிகள் மூலம் உதிரிபாகங்களின் விநியோகம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் படைப்பிரிவு பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அமைப்புகள் ஏற்கனவே சீனா மற்றும் துருக்கியில் செயல்பாட்டில் உள்ளது. இதே அமைப்பை வாங்கியதற்காக 2020 டிசம்பரில் துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது.

தற்போது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை சீன ராணுவம் கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஏசி) நிலைநிறுத்தி இந்திய ராணுவத்துக்கு முட்டுக்கட்டை போட்டுளளது குறிப்பிடத்தக்கது.