நியூயார்க்

நியூயார்க் நகரில் தீ விபத்தில் சிக்கி இந்திய இளைஞர் மரணம் அடைந்தார்.

நியூயார்க் நகரில் ஹார்லெம் பகுதியில் செயின்ட் நிகோலஸ் பிளேஸ் என்ற குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் திடீரென லித்தியம் பேட்டரி ஒன்று வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டு கட்டிடம் முழுவதும் தீ பரவியது.

அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் கீழே குதித்துத் தப்பியோடினர். இவர்களில் 17 பேர் வரை காயமடைந்து உள்ளனர். பாசில் கான் (வயது 27) என்ற இந்திய இளைஞர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார்.

நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் இந்த தகவலி உறுதி செய்துள்ளது. அவரின் குடும்பத்தினருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்து உள்ளது.

தற்போது 4 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. விபத்து  குறித்து காவல் ஆய்வாளர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் நகர அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.