வாஷிங்டன்

அமெரிக்க நாட்டில் கூகுள் பே சேவை நிறுத்தப்பட உள்ளது.

உலகெங்கும் கூகுள் நிறுவனத்தின் பே ஆப் என்ற செயலி இயங்கி வருகிறது. இது யுபிஐ மூலம் பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் பயனாளர்களின் செல்போன் எண் இருந்தாலே அவர்களுக்குப் பணம் அனுப்பவும், அவர்களிடமிருந்து பணத்தைப் பெறவும் முடிகிறது. எனவே இந்த செயலியை உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த செயலி இல்லாத செல்போன்களே இல்லை என்னும் அளவுக்கு இந்தியாவில் இதன் பயன்பாடு உள்ளது. இங்கு தேநீர்க்கடைகள் தொடங்கி மிகப்பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் கூகுள் பே பயன்பாடு உள்ளது.

இதைப் போல் அமெரிக்காவிலும் லட்சக்கணக்கானவர்கள் கூகுள் பே பயன்படுத்தி வருகிறார்கள்., அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு அறிவிப்பைக் கூகுள் பே வெளியிட்டுள்ளது. வரும் ஜூன் 4-ம் தேதி முதல் அமெரிக்காவில் இந்த வசதி நிறுத்தப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் அமெரிக்காவில் மட்டும்தான் இந்த சேவை நிறுத்தப்படுவதாகவும் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வழக்கம்போல் அந்த சேவை பயன்பாட்டில் இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் கூகுள் பே செயலி சேவை நிறுத்தப்பட்டாலும் அதில் உள்ள வசதிகளைக் கூகுள் வாலட்டில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கூகுள் பே ஆப்பை விடக் கூகுள் வாலட்டின் பயன்பாடு மிக அதிகமாக இருப்பதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது