பர்மிங்காம்:
ங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்து எதிரான முதல் டி20 போட்டியை இந்திய அணி வென்றுள்ள நிலையில், ஜூலை 9 ஆம் தேதி 2- வது டி20 போட்டி நடைபெற்றது.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது.

170 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறக்கிய இங்கிலாந்து அணி 121 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்திய வெற்றியின் மூலம் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது.