ஜோர்டான்

லகக் கோப்பை ஜூனியர் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

ஜோர்டானில் 20 வயதுக்குப்பட்டோருக்கான ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் பெண்களுக்கான 76 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரியா மாலிக், ஜெர்மனியின் லாரா செலிவ் குஹனை எதிர்கொண்டார்.

இவ்விறுதிப் போட்டியில் பிரியா மாலிக், 5-0 என்ற புள்ளி கணக்கில் லாரா செலிவ் குஹானை வீழ்த்தினார்  போட்டியின் போது பிரியா மாலிக்குக்கு இடது கண்ணுக்கு மேலே காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்த போதிலும் அவர் வெற்றி பெற்று அசத்தினார்.

அவர் இதன் மூலம் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற 2-வது இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். ஏற்கனவே கடந்த ஆண்டு ஆன்டிம் பங்கல் தங்கம் வென்று இருந்தார்.

இப்போதைய போட்டித் தொடரில் ஆன்டிம் பங்கல், 53 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.