ஃபுளோரிடா:
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி-20 போட்டியில், 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள டாலர்ஹில் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 15 புள்ளி நான்காவது ஓவரில் 100 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த‌து. இதன் மூலம் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாத்வ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4க்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.