மும்பை: இலங்க‍ைக்கு எதிரான டி-20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆகியவற்றுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்க‍ைக்கு எதிரான தொடருக்கான டி-20 அணியில், விராத் கோலி, ஷிகர் தவான், ராகுல், ஷ்ரேயாஸ், ரிஷப் பண்ட்(கீப்பர்), ஜடேஜா, சிவம் துபே, யுஸ்வேந்திர சஹல், குல்தீப் யாதவ், பும்ரா, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், மனிஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அணியில், விராத் கோலி, ரோகித் ஷர்மா, தவான், ராகுல், ஷ்ரேயாஸ், ரிஷப் பண்ட்(கீப்பர்), மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், சிவம் துபே, ஜடேஜா, குல்தீப், சஹல், பும்ரா, சைனி மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்க‍ைக்கு எதிரான ஒருநாள் தொடர், அடுத்தாண்டு ஜனவரி மாதம் 5, 7 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. மொத்தம் 3 போட்டிகள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடர் ஜனவரி 14, 17 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.