இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் விளையாட இருக்கும் வீரர்கள் பெயர்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளிலும் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது.

தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் ஒரு டி20 போட்டியிலும் இந்திய அணி விளையாட இருக்கிறது.

இதில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ஷிகார் தவான், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், மனிஷ் பாண்டே, ரஹானே, கெதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், சஹல், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஷர்துல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

முன்னதாக நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடித்த யுவராஜ், அஸ்வின், ஜடேஜா, ஷமி, மேஷ்யாதவ், ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

புதிதாக, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், மனிஷ் பாண்டே, அக்ஸர் படேல், சஹல், ஹர்துல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ரோஹித் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெறுகிறார். அவரால் விளையாட முடியாத பட்சத்தில் வேறு ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் .