ர்ஹாம்

னடா நாட்டில் உள்ள இந்துக் கோவில்களில் கொள்ளை அடித்த கனடா வாழ் இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடா நாட்டின் டர்ஹாம் மற்றும் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள இந்து கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை நடந்தது. காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தங்கள் விசாரணையில் அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

தற்போது காவல்துறையினர் இந்து கோவில்களை உடைத்து உண்டியல் பணத்தைக் கொள்ளையடித்தது தொடர்பாக கனடா வாழ் இந்தியர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். அந்த இந்தியர் பெயர் ஜெகதீஷ் பாந்தர் (வயது 41) என்பதும், அவர் பிராம்ட்டன் நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

அவர் செய்த குற்றங்கள் வெறுப்பு குற்றங்களாகவோ அல்லது தூண்டப்பட்ட குற்றங்களாகவோ தெரியவில்லை என்று டர்ஹாம் காவல்துறை தெரிவித்துள்ளது., இந்த ஆண்டு முழுவதும் கனடாவில் உள்ள பல்வேறு இந்து கோவில்களை உடைத்துக் கொள்ளையடித்ததில் கைது செய்யப்பட்டவர் தொடர்புடையவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.