டெல்லி:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் நவ்சேரா பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்து மீறிய இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.கடந்த 3-ம் தேதி பூஞ்ச் மாவட்டம் திக்வார் பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.