தவாங்,

ருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய-திபத்திய எல்லையான தவாங் வனப்பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ -17 வி 5 ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.

இதில் விமானத்தில் பயிற்சிக்காக சென்ற 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 6 பேர் பலியானார்கள். சம்பவ இடத்தில் இருந்து படுகாயத்துடன் பயிற்சி விமானி ஒருவர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவரும் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது

விபத்து நடைபெற்ற  சம்பவ இடத்தில் இருந்து உயிரிழந்த 2 பேரின் உடல் மீட்கப்பட்டன. உயிரிழந்த மற்றவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமானப்படை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.