பாங்காக்:
தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வந்தது.

இதில் ஆண்களுக்கான தாமஸ் கோப்பை போட்டியில் அரைஇறுதியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் முன்னாள் சாம்பியனான டென்மார்க்கை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இந்தோனேசியாவுடன் மோதியது.

இதில், 3-0 என்ற கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

73 வருடங்களில் முதன்முறையாக தாமஸ் கப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தகது.