மும்பை: இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிந்த பின்னர், 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறியுள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி.

அவர் கூறியுள்ளதாவது, “இந்திய அணி, இந்தாண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்கிறது. அதனையடுத்து, அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில், இந்தியா வரும் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடும்.

அதற்கடுத்து ஏப்ரல் மாதத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும். சூழல்கள் அனுமதித்தவுடன், கூடிய விரைவில் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள் துவக்கப்படும். அதேசமயம், வீரர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவை மிகவும் முக்கியம். எனவே, அதற்கு முதல் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

உள்நாட்டு கிரிக்கெட் நடவடிக்கைகளை துவங்கும் முன்னதாக, ஒவ்வொரு உறுப்பினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரின் ஆலோசனை பெறப்படும்.” என்றுள்ளார் கங்குலி.