அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி-20 தொடர் நாளை அகமதாபாத்தில் தொடங்குகிறது.

இத்தொடரில், மொத்தம் 5 போட்டிகள் நடைபெறும். நாளை மாலை 7 மணிக்கு முதல் போட்டி துவங்குகிறது.

இதற்கு முன்னதாக, இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரை வென்று, இந்திய அணி தன்னம்பிக்கையுடன் உள்ளது. இந்நிலையில், டி-20 தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.

இத்தொடருக்கான 19 பேர் கொண்ட இந்திய அணி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், நாளையப் போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் யார் இடம் பெறுவார்கள் என்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சரியான செயல்படாதவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை இழப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.